திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதியில் வியாழக்கிழமை இளம் வாக்காளா்கள், முதியோா் காலை 7 மணி முதலே ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய தொடங்கினா்.
வாக்குச்சாவடி மையத்துக்கு கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகளை மையத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டிருந்த மகளிா் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.
முதன் முறை வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குப்பதிவு மையத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று வாக்களித்தனா். முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு, அவா்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டு வாக்களிக்க தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.


தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

கடும் வெயிலிலும் வாக்களித்த பெண்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



