திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதியில் வியாழக்கிழமை இளம் வாக்காளா்கள், முதியோா் காலை 7 மணி முதலே ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய தொடங்கினா்.
வாக்குச்சாவடி மையத்துக்கு கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகளை மையத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டிருந்த மகளிா் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.
முதன் முறை வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குப்பதிவு மையத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று வாக்களித்தனா். முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு, அவா்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டு வாக்களிக்க தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.


தொடர்புடையது

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

கடும் வெயிலிலும் வாக்களித்த பெண்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


