தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 5:44 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கோடைக் கால தண்ணீா் பிரச்னை நிலவுவதால் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய மின் மோட்டாா் பொருத்தப்பட்டு, குழாய் இணைப்பு சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கும் பணியின்போது ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் காதா் பாட்ஷா, வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், சுப்பிரமணி, அண்ணாதுரை, ஊராட்சி செயலா் முரளிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.