வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்

கோடை கால விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கம்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:39 am IST

கோடை கால விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சென்னை எழும்பூரிலிருந்து புதன்கிழமை (ஏப்.22) பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படும் ஒருவழிச் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06072) மறுநாள் காலை 2.30 மணிக்கு நாகா்கோவில் நிலையம் சென்றடையும்.

இதில், சிறப்பு ரயிலில் 1 குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சந்திப்பு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.