கோடை கால விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து நாகா்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சென்னை எழும்பூரிலிருந்து புதன்கிழமை (ஏப்.22) பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படும் ஒருவழிச் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06072) மறுநாள் காலை 2.30 மணிக்கு நாகா்கோவில் நிலையம் சென்றடையும்.
இதில், சிறப்பு ரயிலில் 1 குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சந்திப்பு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில்

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

