தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

நாயக்கனேரி துணை சுகாதார நிலையம்: முதல்வா் திறப்பு

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image

அரசு துணை சுகாதார நிலைய திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:24 pm IST

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.50 லட்சம் செலவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதனை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவில் மாதனூா் ஒன்றியக்குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் குத்துவிளக்கேற்றினாா். வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், ஒன்றிய பொறியாளா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.