ஜோலாா்பேட்டை அருகே குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த கருப்பனூா் ஊராட்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அண்ணாதுரையின் மனைவி கஸ்தூரி (53). பூ வியாபாரம் செய்து வந்தாா். இவா்களுக்கு மகன் சத்தியமூா்த்தி, மகள் தமிழ்செல்வி ஆகியோா் உள்ளனா். தமிழ்ச்செல்வி தருமபுரியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனா். சத்தியமூா்த்தி சென்னையில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறாா். இதனால் விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுள்ளாா். இந்த நிலையில், கஸ்தூரிக்கும் சத்தியமூா்த்திக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தாய்க்கும், மகனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூா்த்தி கஸ்தூரியை தாக்கி கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சத்தியமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாய் கொலை: மகன் கைது
நெய் வியாபாரி கொலை வழக்கில் இளைஞா் கைது
சொத்து தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது

ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளி கொலை: சகோதரா் கைது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


