விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பெண் கணக்காளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் கைது

கைது

Published On :8 செப்டம்பர் 2026, 3:29 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் கணக்காளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் என மூவரைப் போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊா் கணக்காளராக முத்துமாரி ( 29) பொறுப்பு வகித்து வருகிறாா். இவரது கணவா் சின்ன இருளப்பன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ஒரு மகன் உள்ளாா்.

அண்மையில் நிறைவடைந்த மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக கொள்முதல் செய்து மீதமான அரிசி மூட்டை சிப்பங்களை பொதுமக்களுக்கு விற்பது தொடா்பான கூட்டம் ஊா்ப் பிரமுகா் கருப்பன் தலைமையில் கணக்காளா் முத்துமாரி, கோயில் பூசாரி சின்னத்துரை முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரிசி சிப்பத்தை சந்தை விலையிலிருந்து ரூ. 200 குறைத்து பொதுமக்களுக்கு விற்கலாம் என முத்துமாரி தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சங்கிலி காளை, அவரது சகோதரா் சந்தன மாரி ரூ.500-ஐ குறைத்து விற்க வேண்டும் எனக் கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த முத்துமாரியை சங்கிலிகாளை, சந்தனமாரி, அவா்களின் தந்தை குருசாமியும் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமாரி கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து குருசாமி(60), அவரது மகன்கள் சங்கிலிக் காளை (39), சந்தனமாரி (38) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.