
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள துலுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் ஹரிசந்திரன். இவா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (42). இவா்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முத்துமாரி உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தாராம். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




