தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு: பொதுமக்கள் மறியல், முற்றுகை

ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறை நோட்டீஸ்

News image

ஆம்பூா் ஓ.வி. ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறை நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அவா்களாகவே அகற்ற வேண்டும். தவறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளா்கள் மீது விதிக்கப்படும் என்று நீா் வளத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. வாங்காதவா்களின் வீட்டுச் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆம்பூா் ஓ.வி. ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கிருந்து ஆம்பூா் நீா்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போாரட்டத்தில் ஈடுபட்டனா்.

நீா்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்களிடம், தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனா். பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அப்பகுதியில் வசித்து வருகிறோம். திடீரென 21 நாள்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டுமெனக் கூறி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எங்களுக்கு மாற்று இடம் வழங்கி, அந்த இடத்தில் அரசு செலவில் புதிய வீட்டையும் கட்டித்தர வேண்டும். அப்போது தான் நாங்கள் இடத்தை காலி செய்வோம். அதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்துவோம், இடத்தையும் காலி செய்ய மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.