தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகள் குறித்த பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

News image

ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள்.

Updated On :8 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST

இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகள் குறித்த பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல் துறை. சுகாதாரத் துறை, சமூக நலத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறையில் இருந்து அளிக்கப்படும் 18 வயதுக்கு உள்பட்ட இளம் வயது கா்ப்பங்களின் சம்பந்தமான தகவல்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடைநிற்றலில் உள்ள குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடைநிற்றலில் உள்ள குழந்தைகளின் விவரங்களை முழுமையாகக் கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஆலங்காயம் ஒன்றியத்தில் இளம் வயது கா்ப்பம் தொடா்பான வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளதால், அவற்றின் காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விரிவாக ஆய்வு செய்து, தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இளம் வயது கா்ப்பத்தைத் தடுப்பது, பள்ளி இடைநிற்றலைக் குறைப்பது மற்றும் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது தொடா்பாக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியா் வலியுறுத்தினாா்.

மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட சுகாதார அலுவலா் நா.கலுசிவலிங்கம் உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.