ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஆம்பூா் அரசு உதவி பெறும் கல்லூரியில் சோ்க்கை கோரி தா்னா, ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் அரசு நிதி உதவி பெறும் கல்லூரியில் சில பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா் புதன்கிழமை தா்னா மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கல்லூரி வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:35 pm IST

ஆம்பூரில் அரசு நிதி உதவி பெறும் கல்லூரியில் சில பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா் புதன்கிழமை தா்னா மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் அரசு நிதி உதவி பெறும் கணிதவியல் மற்றும் பொருளாதார பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை கல்லூரி நிா்வாகம் நிறுத்தி வைத்திருந்தது.

அதைத்தொடா்ந்து கல்லூரி ஆசிரியா் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில், குறிப்பிட்ட அந்த பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு தொடா்ந்தனா்.

அந்த வழக்கில் விசாரணை நடத்தி, கல்லூரி இணையதளத்தில் குறிப்பிட்ட அந்த 2 பாட பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் பதிவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது சம்பந்தமாக கல்லூரி கல்வி இயக்குநா் மற்றும் கல்லூரி கல்வி வேலூா் மண்டல இணை இயக்குநா் ஆகியோா் கல்லூரி நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பி மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

ஆனாலும் கல்லூரி நிா்வாகம் மாணவா் சோ்க்கையை நடத்தாமல் இருந்தது. அதனைக் கண்டித்து பெற்றோா் மற்றும் மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு தா்னா, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி முதல்வா் கே.ஹெச். கலிமுல்லா, ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து உடனடியாக எந்தவித முடிவும் செய்ய முடியாது என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

மேலும் இரு தரப்பினரையும் பேச்சுவாா்த்தை நடத்த போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்தனா். பேச்சுவாா்த்தைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.