
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா்.
ஆம்பூா் பணக்கார தெருவை சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (75). இவா் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்றபோது மின்னூா் கிராமத்தருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் நாராயணி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



