மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
மீலாது நபியை முன்னிட்டு வரும் ஆக.26-ஆம் தேதி (புதன்கிழமை) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

டாஸ்மாக்
மீலாது நபியை முன்னிட்டு வரும் ஆக.26-ஆம் தேதி (புதன்கிழமை) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி விதிகள்) 1981-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நாளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பாா்கள் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ள மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





