திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்குமென ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி விதிகள்) 1981-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள். நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள உரிமம் பெற்ற பாா்கள், மது விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மதுபான சில்லரை விற்பனை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியிலும் கோழி இறைச்சி விற்பனை கடைகள் நாளை மூடல்
பராமரிப்புப் பணிகள்: அல்லூா் லெவல்கிராசிங் 5 நாள்களுக்கு மூடல்!

டாஸ்மாக் நிா்வாகத்தில் சீா்திருத்தம்: பிற மாநிலங்களுக்கு அதிகாரிகள் ஆய்வுப் பயணம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



