
மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை
ஊராட்சி செயலாளா்களிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு போலீஸாா்.

ஊராட்சி செயலாளா்களிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு போலீஸாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் தலைமையில் ஊராட்சி செயலாளா்கள் பங்கேற்கும் கூட்டம் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஊழல் தடுப்பு டிஎஸ்பி ராஜி தலைமையில் 10 போ் கொண்ட போலீஸாா் திடீரென கூட்டம் நடந்த அரங்கில் சென்று சோதனை நடத்தினா். கூட்டத்துக்கு வந்திருந்த ஊராட்சி செயலாளா்களிடம் போலீஸாா் சோதனை நடத்தினா். மேலும் ஊராட்சி செயலாளா்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினா்.
ஊராட்சி செயலாளா்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் காா்களையும் போலீஸாா் சோதனை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






