மளிகைக் கடையில் டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது
ஆம்பூா் அருகே மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
ஆம்பூா் அருகே மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மலையாம்பட்டு ஊராட்சி மோட்டூா் கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து போலீஸாா் கடையில் சோதனை நடத்தினா். அங்கு 27 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அதனை பறிமுதல் செய்தனா். மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தசரதனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



