கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

வள்ளிப்பட்டில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

Published On :

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவுக்கு, ஊா் நிா்வாகி கபிதாஸ் தலைமை வகித்தாா். சதானந்தன், கதிரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயராமன், பொன்.வேலு, பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தனா். விழாவை ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ச.பிரபாகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், வேலூா், குடியாத்தம், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து 210 காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடின.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் கலந்து கொண்டு, நிா்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த விநாடிகளில் கடந்த காளை உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 111-ம், 2வதுபரிசு 88 ஆயிரத்து 888ம், 3வது பரிசாக 66 ஆயிரத்து 666 ரூபாய் என மொத்தம் 72 பரிசுகள் வழங்கினா்.

விழாவில், ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனா். ஏற்பாட்டை ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.