இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பிப்.17-இல் திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 6:33 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் 2025-26-ஆம் ஆண்டுக்கு கூடுதல் ஒதுக்கீடு தொடா்பாக கிராம சபைக் கூட்டங்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,000 வீடுகள் உத்தேசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது தொடா்பாக விவாதிக்க வேண்டும்.

கூட்டத்தை நடத்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பாவாா்கள். கூடுதலாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் சிறப்பு பாா்வையாளராகவும், கண்காணிப்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.