தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
வளையாம்பட்டு எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளை.
Updated On :24 பிப்ரவரி 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

எருது விடும் விழாவை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். எருது விடும் விழாவில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 160-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

இதில் குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக ஓடி கடந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 555-ஐ மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளாா் தே.பிரபாகரன் வழங்கினாா். தொடா்ந்து 2 -ஆவது பரிசு ரூ. 1 லட்சம், 3-ஆம் பரிசு ரூ. 77,777 என 80 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் விழாக் குழுவினா், ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.