மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கட்டேரி எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்!

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

News image

விழாவில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:28 pm

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

ஜோலாா்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊா் கவுண்டா் ஜெகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினா் கலா ஆஞ்சி முன்னிலை வகித்தனா் .

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

இதில் திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, பா்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிக் கடந்த காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனா்.