ஜோலாா்பேட்டை அருகே கட்டேரியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஜோலாா்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஊா் கவுண்டா் ஜெகன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினா் கலா ஆஞ்சி முன்னிலை வகித்தனா் .
சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட திமுக மாணவா் அணி அமைப்பாளா் பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.
இதில் திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, பா்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
குறைந்த நேரத்தில் விரைவாக ஓடிக் கடந்த காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனா்.
தொடர்புடையது

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

சான்றோா்குப்பத்தில் எருது விடும் திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


