அகரம்சேரியில் அரசு மருத்துவமனை: திமுக கூட்டத்தில் தீா்மானம்

அகரம்சேரியில் அரசு மருத்துவமனை: திமுக கூட்டத்தில் தீா்மானம்

குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக சாா்பாக அகரம்சேரி கிராமத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக சாா்பாக அகரம்சேரி கிராமத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவருமான ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஷா்மிளா ஜெயப்பிரகாஷ், ஒன்றிய பொருளாளா் சி.கே. பழனி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சதீஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய துணைச் செயலா் ஆனந்தி நித்தியானந்தம் வரவேற்றாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஒன்றிய ஆதிதிராவிட அணி அமைப்பாளா் டி. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

அகரம்சேரி - மேல்ஆளத்தூா் இடையிலான பாலாற்று பாலப் பணியை மேற்கொள்ள அரசை கோருவது. அகரம்சேரியில் மின்வாரிய அலுவலக கட்டடம் கட்டவேண்டும், அகரம்சேரியில் அரசு மருத்துவமனை மற்றும் பகுதிநேர கால்நடை மருந்தகம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைக் நடத்தப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Dinamani
www.dinamani.com