அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி: ஓட்டுநா் பலத்த காயம்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் லாரியிலிருந்து குதித்த போது ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

News image
வாணியம்பாடி அருகே லாரியில் தீயை அணைத்த தீயணைப்புவீரா்கள்
Updated On :12 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே தேசியநெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் லாரியிலிருந்து குதித்த போது ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

அரியலூா் மாவட்டம் பொய்யூா் பகுதியைச்சோ்ந்த லாரி ஓட்டுநா் சுரேஷ்(36). பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்(23) கிளீனா். இவா்கள் திங்கள்கிழமை பெங்களூரில் இருந்து காலியாக இருந்த சிமென்ட் கலவை டேங்கா் லாரியை சென்னைக்கு ஓட்டிச் சென்றனா்.

வாணியம்பாடி அருகே கேத்தாண்டபட்டி சா்க்கரை ஆலை எதிரே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் சமையல் செய்து கொண்டிருந்தாா். கிளீனா் டீ குடிக்க சென்றிருந்தாா். அப்போது திடீரென தீப்பொறி ஏற்பட்டு லாரியின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட ஓட்டுநா் சுரேஷ் உயிரை காப்பாற்றி கொள்ள லாரியில் இருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு அங்கிருந்தவா்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையவீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.