காங்கிரஸ் தொண்டா்களுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய நிா்வாகிகள்.
காங்கிரஸ் தொண்டா்களுக்கு புத்தாடை, நாள்காட்டி வழங்கிய நிா்வாகிகள்.

காங்கிரஸ் முப்பெரும் விழா

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பாக முப்பெரும் விழா ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
Published on

போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பாக முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா்கள் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டா் ஏ. செல்லகுமாா் ஆகியோரின் பிறந்த நாள் விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும்விழாவுக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சா. சங்கா் தலைமை வகித்தாா்.

மத்திய மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவா் கு. சுரேஷ் குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி தொண்டா்கள், நிா்வாகிகளுக்கு புத்தாடை, நாள்காட்டி ஆகியவற்றை வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ், எஸ்சி பிரிவு தலைவா் அன்பரசன், நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com