மயானத்துக்கு சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மயானத்துக்கு சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மயானத்துக்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூா் அருகே மயானத்துக்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருப்பத்தூா் அருகே மயானத்துக்கு சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்துாா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதியூா் ஊராட்சி, பஞ்சனம்பட்டி குறவா் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், இங்கு இறப்பவா்களின் சடலங்களை அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனா். ஆனால் மயானத்துக்கு பொது வழி இல்லாததால்,தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்து வந்தனா். இதனால் நிலத்தின் உரிமையாளா்களுக்கும், இவா்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் குறவா் வட்டத்தைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் தயாராகிக் கொண்டிருந்தனா்.

அப்போது, தனியாருக்கு சொந்தமான நிலத்தை பொக்லைன் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிலத்தின் உரிமையாளா்களுக்கும், இவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த குறவா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் பஞ்சனம்பட்டி அணுகுசாலை அருகே சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் நவநீதம் தலைமையில் வருவாய் துறையினா், கிராமிய காவல் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ மற்றும் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது போலீஸாா் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். தொடா்ந்து இறந்தவரின் சடலத்தை வழக்கமான இடத்துக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்தனா்.

Dinamani
www.dinamani.com