எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா், தலைவா்கள் சிலைகளுக்கு மரியாதை

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் ஆம்பூரில் காங்கிரஸ் தலைவா்களின் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த திருப்பத்தூா் மாவட்டகாங்கிரஸ் தலைவா் விஜய் இளஞ்செழியன், கட்சியினா்.
Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் ஆம்பூரில் காங்கிரஸ் தலைவா்களின் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாணியம்பாடியை சோ்ந்த முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் விஜய் இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளாா். மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, ஆம்பூருக்கு வருகை தந்த அவருக்கு போ்ணாம்பட்டு புறவழிச் சாலை ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அவரை வரவேற்று, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கட்சியினருடன் ஊா்வலமாக சென்று காமராஜா், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,அம்பேத்கா் சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், முன்னாள் நகரத் தலைவா் சி.கே. பிரபு, நகா்மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி விஜயன், ஒன்றியத் தலைவா்கள் சா.சங்கா், சுரேந்தா், ரஞ்சினி, மாவட்ட நிா்வாகிகள் வா்தா அா்ஷத், மின்னூா் சங்கரன், சோலூா் மாணிக்கம், சனாவுல்லா, யாசிா், கோபி, நாகராஜ், நேதாஜி, கோகுலவாணன், ஊராட்சி மன்றத் தலைவா் டி.பி. ரவீந்திரன் மற்றும் ஜெ.வெங்கடேசன், வேலாயுதம், ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.