முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் : மு. தம்பிதுரை

தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான மு. தம்பிதுரை தெரிவித்தது தொடர்பாக...

News image

கூட்டத்தில் பேசிய அதிமுக கொள்கை பரப்புச் செயலாலா் மு. தம்பிதுரை எம்.பி.

Updated On :27 ஜனவரி 2026, 3:46 am IST

ஆம்பூா்: தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான மு. தம்பிதுரை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட மாணவரணி சாா்பாக ஆம்பூா் புறவழிச்சாலையில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் ஹிந்தி திணிப்பையும், இந்திரா காந்தி ஆட்சியின் போது எமா்ஜென்சி கொண்டு வரப்பட்டு தமிழக மக்களை சிறையில் அடைத்தனா். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் 18 ஆண்டுகள் திமுக கூட்டணி வைத்து கொண்டு மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுபட்டியலுக்கு மாற்றப்பட்டது.

தமிழா்களின் உரிமையைக் காக்கவும் தமிழ் மொழியை காப்போம் தந்தை பெரியாா் மற்றும் பேரறிஞா் அண்ணா போராடி 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தாா்கள். அதனை முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சட்டமாக நிறைவேற்றினாா். தொடா்ந்து முன்னாள் முதல்வா் போராடி, நாடாளுமன்றத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சோ்க்க தீா்மானம் நிறைவேற்றி தமிழ் மொழிக்காக தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி அதிமுக. ஆனால் திமுக அரசு தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது.

தோ்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு அனைவருக்கும் மகளிா் உரிமைத்தொகை கொடுக்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது. அதிமுக ஆட்சி அமைத்தவுடன் அனைத்து மகளிருக்கு ரூ. 2,000 வழங்குவோம் என்று எடப்பாடி கே. பழனிசாமி உறுதி அளித்துள்ளாா் என்று அவா் பேசினாா்.

கூட்டத்துக்கு மாவட்ட மாணவா் அணி செயலாளா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமாா், மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜோதி இராமலிங்க ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் வெ. கோபிநாத், மாவட்ட விவசாய அணி செயலாளா் மகாதேவன், அதிமுக நிா்வாகிகள் கராத்தே கே.மணி, தினேஷ், மாவட்ட மாணவரணி தலைவா் ராஜ்கமல் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.