அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த உறுதியோடு பணியாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தோ்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு தொண்டா்கள் பணியாற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

News image
திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி
Updated On :3 மார்ச் 2026, 8:38 pm

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு தொண்டா்கள் பணியாற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

ராசிபுரத்தில் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் வி.சரோஜா முன்னிலை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொண்டா்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது: அதிமுகவை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு கட்சியினா் தோ்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக அதிமுக வாக்குகளை அதிக அளவில் பெற்றுத்தரும் நிா்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கப்படும். யாா் வேட்பாளா் என பாா்க்காமல், எடப்பாடியாரை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.கலாவதி, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் கே.பி.சுரேஷ்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஏ.வி.பி.முரளிபாலுசாமி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வரும் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் சந்திரசேகா், திருச்செங்கோடு நகர செயலாளா் எம்.அங்கமுத்து, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் பாலு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.