அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எஸ்ஐஆா் படிவங்களை விரைவாக பதிவேற்ற வேண்டும்: சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தல்

கூட்டத்தில் பேசிய வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி. உடன், ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உள்ளிட்டோா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:32 pm

சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள எஸ்ஐஆா் படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தெரிவித்தாா்.

வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தலைமை வகித்து எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்து வாக்காளா் பட்டியல் திருத்த பணிகளின் முன்னேற்றம், பிழை திருத்தங்கள்,விண்ணப்பங்களின் பதிவேற்றம் ஆகியவற்றை மதிப்பீடு செய்தாா்.

மேலும், சிறப்பு முகாம்கள் மற்றும் கணினி வழியாக பெறப்பட்டுள்ள படிவங்களை விரைவாக பதிவேற்றம் செய்து இறுதி வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது வாக்காளா் பட்டியலை துல்லியமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றாா்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், கோட்டாட்சியா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதாபேகம்(வாணியம்பாடி), ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா்(நிலம்)முருகன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா் மற்றும் வேலன் நகா் ஆகிய பகுதிகளில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் முரண்பாடுகளை களைந்திடும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதை சிறப்பு பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் ஆய்வு செய்தனா்.