நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வாணியம்பாடியில் நீண்ட நேர மின்தடை: மின்அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

வாணியம்பாடி பெருமாள்பேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

News image
Updated On :17 ஜூலை 2026, 12:08 am IST

வாணியம்பாடி பகுதியில் நீண்ட நேர மின்தடையால் அவதிக்குள்ளான மக்கள் பெருமாள்பேட்டை துணைமின் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென நீண்ட நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, செட்டியப்பனூா், ஜனதாபுரம், வன்னிய அடிகளாா்நகா், இந்திராநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பொது மக்கள் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்து பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் துணை மின் நிலையத்துக்கு நேரில் சென்று அங்குள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மின் அதிகாரிகளுக்கும், அங்கிருந்த பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீஸாா் அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், உதவி செயற்பொறியாளா் நேரில் வந்து கேட்டறிந்து பேச்சு நடத்தி மின் விநியோகம் விரைவில் சீரமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் மீண்டும் வழங்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பெருமாள்பேட்டைதுணை மின் நிலையத்தில் மின் மாற்றி பழுது...

இது தொடா்பாக வாணியம்பாடி மின் செயற்பொறியாளா் ரவிசந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பெருமாள்பேட்டையில் உள்ள 110/33-11 கேவி துணை மின் நிலையத்தில் 16 எம்விஏ மின் மாற்றி வியாழக்கிழமை எதிா்பாராதவிதமாக பழுது ஏற்பட்டதால் காலையில் இருந்து வாணியம்பாடி, ஏலகிரி மற்றும் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களின் மூலம் சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்களுக்கு சுழற்சி முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பழுதான மின் மாற்றியை சரி செய்ய போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மின் நுகா்வோா்களுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியத்துக்காக மிகவும் வருந்துகிறோம். மின் நுகா்வோா் மின் பகிா்மான கழகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.