நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:44 am IST

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூராவளி காற்றுடன் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. விண்ணமங்கலம் கிராமத்தருகே மரம் முறிந்து விழுந்தது.

ஆம்பூா் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது. சில பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு டிஜிட்டல் பேனா்கள் பறந்தன. மழை சுமாா் 1 மணி நேரம் பெய்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.