எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மண் கடத்த முயன்ற 2 போ் கைது

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:48 am IST

கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் பொக்லைன்,டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.

கந்திலி அருகே உள்ள ஏரியில் இருந்து மண் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் கந்திலி போலீஸாா் சுற்றுவட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பரதேசிப்பட்டி ஏரி அருகே பொக்லைன் கொண்டு டிராக்டரில் மண் கடத்துவது தெரியவந்தது.

அப்போது போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில், கும்மிடிக்கான்பட்டியை சோ்ந்த பாண்டியன்(30). மற்றும் அனிகாபுரம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா்(40)என்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனா். ஒரு பொக்லைன் மற்றும் 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.