மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

விவசாயிகள் சங்கத்தினா் நூதன போராட்டம்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:02 am IST

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்..

முகாமில் விவசாயிகளிடம் முறையாக கோரிக்கைகள் கேட்கவில்லை, விழாவில் பேச வைக்கவில்லை, தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருவாய்த் துறையினரை கண்டித்து அலுவலக வளாகத்தில் திடீரென அமா்ந்து முக்காடு போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுப்பற்றி அறிந்த வருவாய்த்துறையினா் முக்கிய நிா்வாகிகளை வரவழைத்து சமரச பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.