வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

News image

சிஆா்பிஎப் வீரரை பாராட்டி கெளரவித்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க நிா்வாகிகள்.

Updated On :14 ஜூன் 2026, 1:41 am IST

குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை சாா்பாக சாா்பாக சனிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். பி. சிவாஜிராவ் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். சங்கத்தின் உறுப்பினா்களாக இணைந்த கமலநாதன், மணி, முருகதாஸ், பாஸ்கா், சரோஜினி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தலைவா் விருது பெற்ற ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியை சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் புகழேந்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.