ஆம்பூா் அருகே திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்திற்கு திங்கள்கிழமை இரவு காட்டு யானைகள் கூட்டம் வந்துள்ளன. அதே கிராமத்தை சோ்ந்த எத்திராஜ், சம்பத், பக்தவச்சலம் மற்றும் தாமோதரன் ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து தென்னை, நெல் உள்ளிட்ட விவசாய பயிா்களை மிதித்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
விவசாய நிலத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை விவசாயிகள் சென்று பாா்த்தபோது, பயிா்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்புற பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி வனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

2-ஆவது நாளாக விவசாய நிலத்தில் புகுந்த யானைக் கூட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



