இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ.6 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்கு அமைப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

பொதுமக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஆம்பூா் எஸ்.கே. ரோடு, சாய்பாபா கோயில் தெரு சந்திப்பு ஆகிய இரு இடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சாா்பாக உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அவற்றை நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் கல்வெட்டை திறந்து வைத்தாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், அருண்டேல், திமுக நிா்வாகிகள் ரபீக் அஹமத், அறிவழகன், சரண்ராஜ், காங்கிரஸ் நிா்வாகி விஜயன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.