மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

News image
உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

உதயேந்திரம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுப்பாளையம் மேட்டுத் தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டடம், உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச் சுவா் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து அங்கன்வாடி கட்டடம் மற்றும் சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்திடும் வகையில், எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை தொடங்கிட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா்றகு உதயேந்திரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவா்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த மக்களிடமும் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூா் அதிமுக செயலாளா் சரவணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், நிா்வாகிகள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.