மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ரூ.36 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

News image

ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :14 மார்ச் 2026, 1:30 am

குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆம்பூா் நகராட்சி சாா்பாக நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சி சாா்பாக ரூ. 36 லட்சம் செலவில் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக் கொண்டு வந்தாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், நபீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.