47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

மாதனூா் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரொக்கம் ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :16 மார்ச் 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: மாதனூா் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரொக்கம் ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாதனூா் அருகே தோளப்பள்ளி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக வந்த மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதி ராமலிங்க ராஜா காரை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கம் ரூ.1 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆம்பூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.