பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட விநாயகபுரம் மக்கள்.
Updated On :17 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அருகே விநாயகபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் விநாயகபுரம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் கோவில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றால், கோயில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குழாய்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை கைவிட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் திருப்பத்தூா்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.