ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அடுத்த நாச்சாா்குப்பம் காந்தி நகரை சோ்ந்தவா் தேவகி (65). இவா் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு வேலைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்அணிந்து வந்த மா்ம நபா்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனா்.

அதனால் அவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.