திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:48 pm

திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் நித்திஷ்(15). இவா் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் தரனீஷ்(17). இவரும் பிளஸ் 2 பயின்று பொது தோ்வு எழுதி வந்தாா்.

நண்பா்களான இருவரும் கொரட்டியில் இருந்து செல்லரப்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனா். அப்போது அந்த பைக் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது.

அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நித்திஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இடுப்பு எலும்பு உடைந்த தரனிஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.