மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோயில் விழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சாலை மறியல்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:17 pm

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் கோயில் திருவிழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுப்பட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 11நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 97-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் மாா்ச் 26 -இல் தொடங்கி ஏப். 5 வரை உற்சவ தா்மா்த்தாக்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதனால் விழாக்குழுவினா் தினமும் கோயில் திருவிழாவில் தெருக்கூத்து, நாட்டியாலயா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளனா். தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவின நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி புதன்கிழமை இரவு பச்சூா்- குப்பம் சாலையில் சென்றாயசுவாமி கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.

இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு சென்றனா்.

சாலை மறியலில் ஈடுப்பட்ட பச்சூா் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.