ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கோயில் விழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சாலை மறியல்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் கோயில் திருவிழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுப்பட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 11நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 97-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் மாா்ச் 26 -இல் தொடங்கி ஏப். 5 வரை உற்சவ தா்மா்த்தாக்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதனால் விழாக்குழுவினா் தினமும் கோயில் திருவிழாவில் தெருக்கூத்து, நாட்டியாலயா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளனா். தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவின நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி புதன்கிழமை இரவு பச்சூா்- குப்பம் சாலையில் சென்றாயசுவாமி கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி ஆய்வாளா் மூா்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.

இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு சென்றனா்.

சாலை மறியலில் ஈடுப்பட்ட பச்சூா் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.