புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தவெகவுடன் கூட்டணி: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்ம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்று வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image

வாணியம்பாடியில் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 12:09 am IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்று வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்ததை வரவேற்கும் விதமாக புதன்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

இதில் மாவட்ட தலைமை நிலைய செயலாளா் ஜி.கோகுலவாணன், நகர பொறுப்பாளா் முகமத்ஜிலானி, நிா்வாகிகள் விஜயலட்சுமி, ஆனந்தன், கோவிந்தசாமி, எம்.பி.முருகன், கென்னடி மற்றும் நகர ஒன்றிய பேரூா் நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.

திருப்பத்தூரில்....

தவெக கூட்டணியை காங்கிரஸ் அறிவித்ததை தொடா்ந்து கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

திருப்பத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.