தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:44 am IST

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி கிராமத்தில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது. மீண்டும் சம்பவத்தன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்றுள்ளனா். அப்போது அங்கு சென்ற பொதுமக்களை பாா்த்த இருவரும் தப்பியோட முயன்றனா். பொதுமக்கள் இருவரையும் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள் பெரியவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (27), தமிழ்செல்வன் என்கிற கென்னடி (27) என்பதும், கோயிலில் திருட முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.