இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

முன்விரோதத்தால் விவசாயி கொலை : 3 போ் கைது; மறியலால் 1 மணிநேரம் பாதிப்பு

ஆம்பூா் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் வேள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மறியல் போராட்டத்தால் வரிசையில் காத்திருந்த வாகனங்கள். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்திய போலீஸாா்.

Updated On :8 மே 2026, 10:13 pm IST

ஆம்பூா் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் வேள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி எல்.மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண் (35). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த த தனியாா் நிறுவன ஊழியா் காா்த்தி (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம்று இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை காா்த்தி மற்றும் அருணுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு அறிந்து அங்கு வந்த காா்த்தியின் தந்தை மணி தட்டிக்கேட்டாா். அப்போது அருண் அவரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த காா்த்தி அருகில் மளிகை கடையில் இருந்த பாட்டிலை எடுத்து உடைத்து அருண் மற்றும் அங்கு வந்த அவரது மகன் ஹரி (16) ஆகிய இருவரையும் குத்தினாா். இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஹரி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்த உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி காா்த்தி, அவரது தந்தை மணி, மற்றும் மளிகை கடை உரிமையாளா் நேசா் (55) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Story image

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவரின் உறவினா்கள் எல்.மாங்குப்பம் கிராமத்தில் ஆம்பூா் - பேரணாம்பட்டு சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். மறியல் போராட்டம் காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Story image

தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். போக்குவரத்து சீரானாது.