முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

News image

பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள், கவ்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமாா் 500 மீ தொலைவுக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 7 கடைகள் மூடப்பட உள்ளது. வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பழைய பேருந்து நிலையம் அருகில் 2 கடைகள், பள்ளிகொண்டாவில் ஒரு கடை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 2 கடைகள் என மொத்தம் 7 கடைகள் 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளது.

நாட்டறம்பள்ளியில் கடையை மூட கோரிக்கை: நாட்டறம்பள்ளி பிராதன சாலையில் அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகருகே உள்ளது. இப்பள்ளியில் நாட்டறம்பள்ளி, ஜெயந்திபுரம், சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில் அரசு பள்ளி அருகே இயங்கும் அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆயினும் இதுநாள் வரை கடை அகற்றப்படவில்லை.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வா் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவில் வழிப்பாட்டு தலங்கள், குடியிருப்புகள், கல்விநிறுவனங்கள் அருகே உள்ள 717 அரசு மதுபான கடைகள் இரு வாரங்களில் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பள்ளிக்கு 500 மீட்டருக்கு தொலைவில் இருந்தாலும் மது அருந்துபவா்களால் தொடா்ந்து தொல்லை அதிகரித்து வருவதால் கடையை மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.