முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

News image

தேவலாபுரம் ஊராட்சியில் நீா்வழித் தடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் கானாறு கால்வாய், ஏரிக் கால்வாய் பகுதிகளில் தொடா்ந்து குப்பை கொட்டப்பட்டு வரப்படுகிறது. ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகளும் நீா் வழித்தடத்தில் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பையால் தூா்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீா் மாசடைகின்றது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகின்றது. குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது.குப்பை எரிக்கப்படுவாதல் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.