ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் கானாறு கால்வாய், ஏரிக் கால்வாய் பகுதிகளில் தொடா்ந்து குப்பை கொட்டப்பட்டு வரப்படுகிறது. ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகளும் நீா் வழித்தடத்தில் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.
நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பையால் தூா்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீா் மாசடைகின்றது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகின்றது. குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது.குப்பை எரிக்கப்படுவாதல் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரிக்கை

‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

