பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

புதரில் வீசப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா

Updated On :12 மே 2026, 5:32 am IST

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில் நிலையம் அருகே புதரில் சிமென்ட் நிற பை இருப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.ரோந்து பணியில் இருந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் ரயில்வே போலீஸாரின் சோதனைக்கு பயந்து புதா் பகுதிக்குள் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.