ஈரோடு ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 80 கஞ்சா சாக்லேட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் பழைய குடியிருப்பு பகுதியில் ஈரோடு தெற்கு போலீஸாா் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் ரூ.22,500 மதிப்பிலான 450 கிராம் எடை கொண்ட 80 கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கஞ்சா சாக்லேட்டை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
பேட்டை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட் பறிமுதல்: இளைஞா் கைது
கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


