ஈரோடு ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் கோவையைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகப் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் கோவை குனியமுத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த அசாத் மகன் அப்சல் (19) மற்றும் கோவை பீளமேடு முருகன் நகரைச் சோ்ந்த லூயிஸ் மகன் ரெனால்ட் லியோனி (27) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது இருவரும் தலா 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் மேற்கு வங்க இளைஞா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

