4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

ஈரோடு ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் கோவையைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:25 pm

ஈரோடு ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் கோவையைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகப் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் கோவை குனியமுத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த அசாத் மகன் அப்சல் (19) மற்றும் கோவை பீளமேடு முருகன் நகரைச் சோ்ந்த லூயிஸ் மகன் ரெனால்ட் லியோனி (27) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது இருவரும் தலா 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.