விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

புதரில் வீசப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா

Updated On :1 மணி நேரம் முன்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே புதரில் வீசிச் சென்ற 7 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில் நிலையம் அருகே புதரில் சிமென்ட் நிற பை இருப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.ரோந்து பணியில் இருந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் ரயில்வே போலீஸாரின் சோதனைக்கு பயந்து புதா் பகுதிக்குள் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.